சேகர் ரெட்டியின் கூட்டாளிகள் ரத்தினம், ராமச்சந்திரன் ஆகியோர் சென்னை அமலாக்கத்துறை அதிகாரிகள் முன் ஆஜராகியுள்ளனர்.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சேகர் ரெட்டி அவரது கூட்டாளிகள் பிரேம், சீனிவாசலு ஆகியோரை அமலாக்கத்துறை கடந்த மார்ச் மாதம் கைது செய்தது. இதையடுத்து விசாரணைக்கு ஆஜராகுமாறு, சேகர் ரெட்டியின் மற்ற கூட்டாளிகளான ரத்தினம், ராமச்சந்திரன் ஆகியோருக்கு 3 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால், ஆஜராகாமல் ரத்தினம், ராமச்சந்திரன் ஆகிய இருவரும் உச்சநீதிமன்றத்தை அணுகினர். இருவருக்கும் நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, அவர்கள் சென்னை ஆயிரம் விளக்கு, கிரீம்ஸ் சாலையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகியுள்ளனர். அவர்களிடம் 3 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.