காவல்துறை தலைவருக்கு ஆதரவு தெரிவிக்க சேகர் பாபுவுக்கு தகுதி வேண்டும் - அண்ணாமலை

காவல்துறை தலைவருக்கு ஆதரவு தெரிவிக்க சேகர் பாபுவுக்கு தகுதி வேண்டும் - அண்ணாமலை
காவல்துறை தலைவருக்கு ஆதரவு தெரிவிக்க சேகர் பாபுவுக்கு தகுதி வேண்டும் - அண்ணாமலை

காவல்துறை தலைவருக்கு ஆதரவு தெரிவிப்பதற்கு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருக்கு தகுதி வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும் விமர்சனம் செய்துள்ளார்.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி காசி விஸ்வநாதர் ஆலயத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள கோவில் வளாகத்தை திறந்து வைக்கும் நிகழ்ச்சியை காணொளியில் காணும் நிகழ்ச்சி காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் அருகே உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை சிவபெருமானின் பிரித்திவி (மண்) ஸ்தலமாக விளங்கும் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர், பிரதமரின் வாரணாசி நிகழ்ச்சியை காணொளி மூலம் கட்சித் தொண்டர்களுடன் அமர்ந்து பார்வையிட்டார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை பேசும்போது... மாநில அரசு பெயரளவிற்கு மட்டுமே விவசாயத்திற்கு தனியாக பட்ஜெட் போட்டிருக்கிறார்கள். ஆனால், மோடி ஆட்சியில் கடந்த 7 ஆண்டுகளில் உரத்திற்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை. எனவே மாநில அரசு மத்திய அரசு மீது புகார் அளிப்பதை தவிர்த்து மாநில அரசு விவசாயிகளுக்காக என்ன செய்திருக்கிறது உரத்திற்காக மானியம் வழங்கி இருக்கிறார்களா என்பதை சிந்திக்க வேண்டும்.

மத்திய அரசுடன் மாநில அரசு இணைந்து செயல்பட வேண்டும். கவர்ச்சிகரமாக பட்ஜெட்டை மட்டும் போட்டுவிட்டு மத்திய அரசு எல்லாம் செய்து விடும் என எதிர்பார்க்கிறார்கள். பரத நாட்டிய கலைஞர் ஜாகிர் உசேன் விஷயத்தில் இந்து அறநிலையத்துறை நாடகமாடுகிறது. யாரெல்லாம் கடவுளை நம்பி ஆன்மிகத்தை நம்பி கோவிலில் சாமி தரிசனம் செய்ய விரும்புகின்றார்களோ அவர்களுக்கு நமது நம்பிக்கையில் நிச்சயமாக இடம் இருக்கிறது. அதைத் தடுத்து நிறுத்துவதற்கு யாருக்கும் அருகதை கிடையாது.

சிபிஎஸ்இ தேர்வில் சர்ச்சைக்குரிய கேள்வி குறித்து கேட்டதற்கு... இந்தியாவில் இரண்டு பேர் வேலையில்லாமல் இருக்கிறார்கள் ஒன்று காங்கிரஸ்காரர்கள் மற்றொன்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள். வேலை இல்லாதவர்கள் சொல்வதை சீரியசாக எடுத்துக் கொள்ளக் கூடாது பாரபட்சம் இல்லாமல் திமுக உறுப்பினர்கள் யாரெல்லாம் தவறு செய்து இருக்கிறார்களோ அவர்கள் மீது நாளை எப்ஐஆர் பதிவு செய்தால் காவல்துறை தலைவரை முதல் ஆளாய் வரவேற்பது பாரதிய ஜனதா கட்சிதான்.

இந்து அறநிலையத் துறை அமைச்சர் கட்சி மாரி இன்னொரு கட்சிக்கு வந்து வெள்ளை கலர் சட்டை அணிந்து நெற்றியில் பட்டை அடித்துக் கொண்டால் அவரின் பழைய வரலாறை மக்கள் மறந்து விடுவார்களா என்ன? இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் வாய்க்கு வந்ததை பேசக்கூடாது. காவல்துறை தலைவரை ஆதரித்து பேசுவதற்கு தகுதி வேண்டும் சட்டத்தை மதிப்பவராக சட்டத்தின் மீது நம்பிக்கை வைத்திருப்பவராக இருக்க வேண்டும் ஆன்மிக வேஷம் போட்டுக் கொள்ளக்கூடாது என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com