உதயநிதி தலைக்கு விலை அறிவித்த சாமியாரின் தலையை சீவினால் 100 கோடி - சீமான்

”துறவி பரம்ஹன்ஸ் ஆச்சார்யாவின் தலையை சீவினால், தான் 100 கோடி தருகிறேன்” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன ஒழிப்பு குறித்த பேச்சுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பலை உருவாகியது. அந்த வகையில், அயோத்தியைச் சேர்ந்த துறவி பரம்ஹன்ஸ் ஆச்சார்யா, உதயநிதி ஸ்டாலின் படத்தை வாளால் கிழித்து தீயிட்டு கொளுத்தியதுடன், அவரது தலைக்கு ரூ.10 கோடியும் அறிவித்திருந்தார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. இதற்குப் பதிலளித்த அமைச்சர் உதயநிதி, ”எதுக்கு ரூ.10 கோடி? பத்து ரூபாய் சீப்பு கொடுத்தால் நானே சீவிவிட்டு போயிடுவேன்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், ”துறவி பரம்ஹன்ஸ் ஆச்சார்யாவின் தலையை சீவினால், தான் 100 கோடி தருகிறேன்” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com