நகை கடையினர் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள் - காவல்துறையின் விழிப்புணர்வு வீடியோ 

நகை கடையினர் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள் - காவல்துறையின் விழிப்புணர்வு வீடியோ 
நகை கடையினர் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள் - காவல்துறையின் விழிப்புணர்வு வீடியோ 

நகை கடையினர் எந்த மாதிரியான பாதுகாப்பு அம்சங்களை பின்பற்ற வேண்டும் என தமிழக காவல்துறையினர் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

கடந்த 14ஆம் தேதி வேலூர் மாவட்டத்தில் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் 15.8 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த கொள்ளையில் ஈடுபட்டதாக டிக்கா ராமன் என்பவரை வேலூர் காவல்துறையினர் கைது செய்து சுடுகாட்டில் மறைத்து வைத்திருந்த தங்கத்தை மீட்டனர். இந்த கொள்ளையில் குற்றவாளியை விரைவாக கைது செய்ய முக்கிய பங்காற்றியது சிசிடிவி காட்சிகள். இதனால் நகைக்கடையினர் எந்த மாதிரியான பாதுகாப்பு அம்சங்களை பின்பற்ற வேண்டும் என தமிழக காவல்துறையினர் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் கடையை சுற்றி நான்கு புறமும் அதி நவீன சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் எனவும் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

மேலும் சிசிடிவி கேமராக்களை மாதம் ஒருமுறை பரிசோதனை செய்ய வேண்டும் எனவும், கடையின் முன் மற்றும் பின் பக்கம் போதுமான இரவு காவலர்களை நியமித்து கூர்ந்து கண்காணிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

கடைகளில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ள நகைகளை இரவு நேரத்தில் பாதுகாப்பாக எச்சரிக்கை ஒலியுடன் கூடிய பெட்டகத்தில் வைக்க வேண்டுமென கூறியுள்ளனர். காவல்துறையினரால் நடத்தப்படும் கலந்தாய்வு கூடத்தில் கலந்து கொண்டு பாதுகாப்பு முறைகளை மேம்படுத்தி கொள்ள வேண்டும் என விழுப்புணர்வை ஏற்படுத்தி உள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com