மெரினாவில் 144 தடை உத்தரவு: காவல்துறை அறிவிப்பு

மெரினாவில் 144 தடை உத்தரவு: காவல்துறை அறிவிப்பு

மெரினாவில் 144 தடை உத்தரவு: காவல்துறை அறிவிப்பு
Published on

சென்னை மெரினா கடற்கரையில் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதாக காவல்துறை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மெரினா கடற்கரையில் இளைஞர்கள் நாளை கூட இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியதை அடுத்து நேப்பியர் பாலம் முதல் கலங்கரை விளக்கம் வரையிலான பகுதிகளில் காவல்துறையினர் பிற்பகல் முதலே குவிக்கப்பட்டு வந்தனர். இந்தநிலையில் செய்தியாளர்களிடம் பேசிய காவல் கூடுதல் ஆணையர் சங்கர், மெரினாவில் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதாகத் தெரிவித்தார். இதனால், மெரினா கடற்கரை பகுதிகளில் பேரணி, ஆர்ப்பாட்டம், மனித சங்கிலி ஆகிய போராட்டங்களை நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 144 தடை உத்தரவால் நடை பயிற்சி, சுற்றுலாவுக்காக மெரினாவுக்கு வருபவர்களுக்குத் தடை இல்லை என்றும் அவர் தெரிவித்தார். இந்த தடை உத்தரவு இன்று நள்ளிரவு முதல் பிப்ரவரி 12ம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் சங்கர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com