5-க்கும் மேற்பட்டோர் கூட தடை - சென்னை காவல் ஆணையர்

5-க்கும் மேற்பட்டோர் கூட தடை - சென்னை காவல் ஆணையர்
5-க்கும் மேற்பட்டோர் கூட தடை - சென்னை காவல் ஆணையர்

பொது இடங்களில் 5-க்கும் மேற்பட்டோர் கூட தடை விதிக்கப்படுவதாக சென்னை காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11760 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 7114 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். கொரோனாவைக் கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் சில தளர்வுகளுடன் மே31ம் தேதி ஊரடங்கை நீட்டித்து முதலமைச்சர் பழனிசாமி ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் சென்னையில் 144 தடை உத்தரவு மே.31 வரை நீட்டிக்கப்படுவதாக காவல் ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து பொது இடங்களில் 5-க்கும் மேற்பட்டோர் கூடவும் தடை விதிக்கப்படுவதாகவும் அறிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com