சீல் வைக்கப்பட்ட குடிநீர் ஆலைகள் புதிதாக விண்ணப்பிக்கலாம் என்றும், விண்ணப்பத்தினை அரசு பரீசிலிக்க வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விண்ணப்பங்கள் மீது 15 நாட்களில் முடிவெடுக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக நீதிமன்ற உத்தரவுப்படி பொதுப்பணித்துறை நிலநீர் கோட்ட செயற்பொறியாளர் அனுமதி பெறாமல் இயங்கி வந்த மினரல் வாட்டர் நிறுவனங்கள் மீது தமிழகம் முழுவதும் சீல் வைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.