தொடர் மழை: இந்த 7 மாவட்டங்களிலும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!

தொடர் மழை: இந்த 7 மாவட்டங்களிலும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!
தொடர் மழை: இந்த 7 மாவட்டங்களிலும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!

தொடர் மழை காரணமாக தமிழகத்தில் 7 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தொடர் மழை காரணமாக சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று (நவ.2) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. மழை மேலும் இரு தினங்களுக்கு தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இதையும் படிக்கலாமே: ”கனமழையில் தப்பியதா சென்னை?” - மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் விளக்கம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com