பள்ளிக்கு சென்ற மாணவியை காணவில்லை: பெற்றோர் சோகம்!

பள்ளிக்கு சென்ற மாணவியை காணவில்லை: பெற்றோர் சோகம்!

பள்ளிக்கு சென்ற மாணவியை காணவில்லை: பெற்றோர் சோகம்!
Published on

திருத்தணி அருகே பள்ளிக்குச் சென்ற மகள் வீடு திரும்பவில்லை என பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த ஆர்.கே.பேட்டை வங்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் பவ்யா அதே பகுதியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை பள்ளிக்கு சென்றவர் மதியம் வீட்டிற்கு வந்து சாப்பிட்டுவிட்டு திரும்பிச் சென்றுள்ளார். 

ஆனால் மாணவி மாலை வீட்டிற்கு வராததால் அக்கம் பக்கம் மற்றும் தோழிகள் வீடுகளில் பெற்றோர் தேடிப்பார்த்துள்ளனர். ஆனால் எங்கும் பவ்யா இல்லாததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், இதுதொடர்பாக ஆர்.கே.பேட்டை காவல் நிலையத்தில் மகளைக் காணவில்லை என புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து மாணவி பவ்யாவை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com