தமிழ்நாடு
பள்ளி பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு - மாணவர்கள் கோரிக்கை ஏற்பு
பள்ளி பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு - மாணவர்கள் கோரிக்கை ஏற்பு
10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு தற்போது 2.30 மணி நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. ஆனால், இந்த நேரம் போதுமானதாக இல்லையென மாணவர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், 10, 11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு கூடுதலாக அரை மணி நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. புதிய தலைமுறைக்கு தொலைபேசி வாயிலாக பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இந்த தகவலை தெரிவித்தார். இந்த அறிவிப்பின் மூலம் மாணவர்கள் பொதுத்தேர்வுகளை மூன்று மணிநேரம் எழுதுவார்கள்.