5 மாதங்களுக்கு முன் காணாமல்போன சிறுமி எலும்புக் கூடாக கண்டெடுப்பு

5 மாதங்களுக்கு முன் காணாமல்போன சிறுமி எலும்புக் கூடாக கண்டெடுப்பு

5 மாதங்களுக்கு முன் காணாமல்போன சிறுமி எலும்புக் கூடாக கண்டெடுப்பு
Published on

5 மாதங்களுக்கு முன் காணாமல்போன பள்ளிச் சிறுமி எலும்புக் கூடாக கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் திருத்தணியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

10ஆம் வகுப்பு படித்துவந்த அந்த மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே புதுவெங்கடாபுரம் கிராமத்தைச்  சேர்ந்த 14 வயது சிறுமி, 10ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதி பள்ளி சென்ற அவர், மாலை வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பொதட்டூர்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், கீச்சலம் கிராமத்தில் உள்ள கரும்புத் தோட்டத்தில் மனித எலும்புத் துண்டுகள் கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அதனருகில் பள்ளி சீருடை, புத்தகப்பை, தலைமுடி உள்ளிட்டவை புதைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. 

தகவலறிந்து சென்ற திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி பொன்னி நேரில் விசாரணை மேற்கொண்டார். 5 மாதங்களுக்கு முன் காணாமல்போன பள்ளிச் சிறுமி, பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

இதுகுறித்து அரசு உயரதிகாரிகளிடம் அனுமதி பெற்று, எலும்புகளை ஆய்வுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com