கள்ளக்குறிச்சி விவகாரம் - கைது செய்யப்பட்டுள்ள பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமீன் மறுப்பு

கள்ளக்குறிச்சி விவகாரம் - கைது செய்யப்பட்டுள்ள பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமீன் மறுப்பு
கள்ளக்குறிச்சி விவகாரம் - கைது செய்யப்பட்டுள்ள பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமீன் மறுப்பு

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிரிழப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் உள்ள பள்ளி தாளாளர் உட்பட ஐந்து பேருக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அந்தப் பள்ளியின் தாளாளர், ஆசிரியர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இவர்கள் ஜாமீன் கேட்டு விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.

அப்போது நீதிபதி சாந்தி மனுதாரர்களின் வழக்கறிஞரிடம் கூறியதாவது:

சின்னசேலம் காவல் நிலையத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கை அடிப்படையில் தற்போது ஜாமீன் கேட்கிறீர்கள். இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில் அவர்கள் தனியாக முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்திருப்பார்கள். அதில் எந்தெந்த பிரிவுகள் கூடுதலாக சேர்க்கப்பட்டிருக்கிறது என்பது தெரியாது. எனவே சிபிசிஐடி பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையை சமர்ப்பித்து ஜாமீன் கோரலாம். எனவே தற்போது ஜாமீன் வழங்க முடியாது. வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். அப்போது சிபிசிஐடி பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையை வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதி கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com