மதுரையில் அரசு உதவி பெறும் பள்ளியின் பால்கனி இடிந்து விழுந்த விபத்தில் 3 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் எதிரே அரசு உதவி பெறும் மேல்நிலை பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் கட்டடம் சுமார் 150 ஆண்டுகள் பழமையானதாக உள்ளது. இந்த பள்ளியில் சுமார் 500 பேர் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை பள்ளிக்கு மாணவர்கள் வந்து கொண்டிருந்தபோது பள்ளியின் பால்கனி சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 11 வகுப்பு படிக்கக்கூடிய வீரக்குமார், சக்திவேல், குமாரவேல் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
இதையடுத்து அங்கிருந்த ஆசிரியர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகினறனர். உரிய ஆய்வு நடத்தப்படாமல் பாதுகாப்பற்ற முறையில் இந்த பள்ளி இயங்கி வருவதாக பெற்றோர் புகார் தெரிவிக்கின்றனர். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.