பாலகிருஷ்ண ரெட்டி மனு மீது உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

பாலகிருஷ்ண ரெட்டி மனு மீது உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

பாலகிருஷ்ண ரெட்டி மனு மீது உச்சநீதிமன்றம் இன்று விசாரணை
Published on

சிறை தண்டனையை ரத்து செய்யக்கோரி முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

கடந்த 1998-ஆம் ஆண்டு பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்திய வழக்கில், பாலகிருஷ்ண ரெட்டியை குற்றவாளி என சிறப்பு நீதிமன்றம் அறிவித்து 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதனால் அமைச்சர் மற்றும் எம்எல்ஏ பதவியை இழந்த பாலகிருஷ்ண ரெட்டி, சிறப்பு நீதிமன்றம் விதித்த தண்டனையை ரத்துச் செய்யக் கோரி, கடந்த 17-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ளது. ஏற்கெனவே சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்புக்கு தடை விதிக்க முடியாது என உயர்நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com