ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட இடைக்கால தடை..!

ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட இடைக்கால தடை..!

ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட இடைக்கால தடை..!
Published on

ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வரும் 23-ஆம் தேதி வரை வெளியிட உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை 69, 90‌ வாக்குகளுடன் வெற்றி பெற்‌றதாக அறிவிக்கப்பட்டது. திமுக வேட்பாளர் அப்பாவு 49 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

இன்பதுரை வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பாவு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில், செல்லாது என அறிவிக்கப்பட்ட 203 தபால் வாக்குகளையும், 19, 20, 21 ஆகிய சுற்றுகளில் எண்ணப்பட்ட வாக்குகளையும் மறு எண்ணிக்கை செய்யும்படி தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி ராதாபுரம் சட்டமன்றத்தொகுதியில் பதிவான வாக்குகளை மீண்டும் எண்ணும் பணி இன்று நடைபெற்று வருகிறது. ராதாபுரத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட வாக்குப்பெட்டிகள் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திலுள்ள ஒரு அறையில் வைத்து மீண்டும் எண்ணப்பட்டு வருகிறது. உயர்நீதிமன்றத் தலைமை பதிவாளர் நியமித்த, ஊழல் கண்காணிப்பு பதிவாளர் சாய் சரவணன் முன்னிலையில் மறுவாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இந்தப் பணியில் 24 ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அதிமுக எம்எல்ஏ இன்பதுரை தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதாவது மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என அதிமுக வேட்பாளர் இன்பதுரை வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது. அதேசமயம் ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வரும் 23-ஆம் தேதி வரை வெளியிட உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com