சத்தியமங்கலம்: அடர்ந்த காட்டுப்பகுதியில் ஆம்புலன்ஸில் பிறந்த பெண் குழந்தை!

சத்தியமங்கலம்: அடர்ந்த காட்டுப்பகுதியில் ஆம்புலன்ஸில் பிறந்த பெண் குழந்தை!
சத்தியமங்கலம்: அடர்ந்த காட்டுப்பகுதியில் ஆம்புலன்ஸில் பிறந்த பெண் குழந்தை!

கடம்பூர் மலைக்கிராமத்தில் இருந்து கர்ப்பிணியை பிரசவத்துக்கு அழைத்துச் செல்லும் வழியில் ஆம்புல்ஸிலேயே பெண் குழந்தை பிறந்தது.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கோட்டமாளம் மலைப்பகுதியைச் சேர்ந்த கிருஷணன் என்பவரின் மனைவி கிருஷ்ணம்மாள் (25). இவர்கள் வசிக்கும் குன்றி கிராமம் அடர்ந்த காட்டுப்பகுதியில் இருக்கிறது. போக்குவரத்து வசதியில்லாத நிலையில், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த கிருஷ்ணம்மாளுக்கு இடுப்பு வலி ஏற்பட்டுள்ளது.

இது குறித்து சத்தியமங்கலம் 108 ஆம்புலன்ஸூக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கோகுலகண்ணன் மற்றும் மருத்துவ உதவியாளர் சங்கர் ஆகியோர் நிறைமாத கர்ப்பிணியான கிருஷ்ணம்மாளை 108 ஆம்புலன்ஸில் ஏற்றிக்கொண்டு கடம்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அடர்ந்த காட்டுப்பகுதியான வெள்ளைத்தொட்டி என்ற இடத்தின் அருகே வரும்போது வலி அதிகமானதால் மருத்துவ உதவியாளர் சங்கர், ஓட்டுநர் கோகுலகண்ணன் ஆகியோர் பிரசவம் பார்த்தனர். இதில் அவருக்கு நல்ல நிலையில் பெண் குழந்தை பிறந்தது. பின்னர் அதே ஆம்புலன்ஸில் தாய் மற்றும் குழந்தையை சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com