2வது நாளாக தொடரும் சட்டமன்ற உறுப்பினரின் சத்தியாகிரகப் போராட்டம்

2வது நாளாக தொடரும் சட்டமன்ற உறுப்பினரின் சத்தியாகிரகப் போராட்டம்
2வது நாளாக தொடரும் சட்டமன்ற உறுப்பினரின் சத்தியாகிரகப் போராட்டம்

கன்னியாகுமரியை தேசிய பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி திமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் மனோ தங்கராஜ் 2வது நாளாக இன்றும் சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினரான மனோ தங்கராஜ் தனது அலுவலகம் முன் நேற்று காலை சத்தியாகிரகப் போராட்டத்தை தொடங்கினார். இரவு முழுவதும் அவரது போராட்டம் தொடர்ந்த நிலையில், 30 இளைஞர்களும் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சட்டமன்ற உறுப்பினர்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார் ஆகியோரும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். விவசாய சங்க நிர்வாகிகள், அரசியல் கட்சியினரும் மனோ தங்கராஜின் சத்தியாகிரகப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

கன்னியாகுமரியை தேசிய பேரிடர் மாவட்டமாக அறிவித்து, புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளும் வரை தனது போராட்டம் தொடரும் எனவும் சட்டமன்ற உறுப்பினர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com