சதுரகிரிமலைப் பகுதிக்கு பக்தர்கள் செல்ல தடை!

சதுரகிரிமலைப் பகுதிக்கு பக்தர்கள் செல்ல தடை!

சதுரகிரிமலைப் பகுதிக்கு பக்தர்கள் செல்ல தடை!
Published on

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக, பாதுகாப்பு கருதி  சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல 2வது நாளாக வனத்துறை தடை விதித்துள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட  வத்திராயிருப்பு அருகே அமைந்துள்ளது சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில். இந்த கோயிலானது தரைமட்டத்திலிருந்து சுமார் 35௦௦அடி உயரத்தில் அமைந்துள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்தகோவிலுக்கு பல்வேறு மாவட்டங்களிலிருந்து பகதர்கள் வருகை தருகின்றனர். வனத்துறை சார்பில் இந்த கோயிலுக்கு அமாவாசை , பௌர்ணமி, பிரதோஷம்  ஆகிய  நாட்களில் பக்தர்கள் அனுமதிக்கபடுகின்றனர். 

இந்நிலையில் நேற்றுமுதல் பிரதோஷத்தை முன்னிட்டு நான்கு  நாட்கள் வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர்  மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளான சங்கிலிப்பாறை, மாங்கனி ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மழைபெய்துவருவதால், சதுரகிரி இதனால் சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல வனத்துறை நேற்று அனுமதி  மறுத்தது. மேலும் வானிலை ஆய்வு மையம் மூன்று நாட்களுக்கு மழைபெய்யும் என தெரிவித்ததை அடுத்து இன்று இரண்டாவது நாளாக பக்தர்கள் கோயிலுக்கு செல்ல வனத்துறை அனுமதிமறுத்துள்ளது. இதனை அடுத்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த பக்தர்கள்  நுழைவு வாயிலை முற்றுகையிட்டு காத்திருக்கின்றனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சதுரகிரி கோயிலில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெள்ளபெருக்கில் 8 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.


 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com