தமிழ்நாடு
சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்ற வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி
சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்ற வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி
சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாரதிய ஜனதா எம்.பியும், சொத்துக்குவிப்பு வழக்கைத் தொடர்ந்தவருமான சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
சென்னை விமானநிலையத்தில் பேசிய அவர், தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி சிறப்பாக நடைபெறுவதாக தெரிவித்தார். ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு திமுக தலைமையிலான அரசுதான் அனுமதி வழங்கியது என கூறினார். சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு தண்டனை கிடைத்துவிட்டது எனவே அவரை தமிழக சிறைக்கு மாற்ற வேண்டும் எனவும் தெரிவித்தார்.