மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஜெயலலிதாவின் தோழி வி.கே சசிகலா சாமி தரிசனம் செய்தார், சசிகலாவோடு செல்பி எடுத்துக்கொள்ள பொதுமக்கள் ஆர்வம் காட்டினார்கள்.
மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா 4 ஆண்டுகள் சிறை தன்டனை முடிந்து தீவிர அரசியலில் ஈடுபடபோவதாக தெரிவித்த நிலையில், திடீரென்று அரசியலில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக தெரிவித்திருந்தது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்திருந்தது.
இதன் பிறகு அமைதி காத்து வந்த சசிகலா கடந்து சில தினங்களாக ஆன்மிக தலங்களுக்கு சென்று சாமி தரிசனம் மேற்கொண்டு வருகிறார். அதே போல் மதுரையில் உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனத்திற்கு மாலை வருகை தந்தார்.
இதனை அறிந்த பொதுமக்கள் அவரைப் பார்ப்பதற்காக மீனாட்சி அம்மன் கோவிலில் ஆர்வமாக காத்திருந்தனர், சசிகலா சுவாமி தரிசனத்திற்குப் பின்னர் வந்ததும், அவருடன் சிலர் செல்பி எடுத்துக்கொள்ள ஆர்வம் காட்டியதை அடுத்து அவர்களோடு செல்பி எடுத்துக்கொண்டார். தொடர்ந்து சட்டப்பேரவை தேர்தலில் அமமுக மற்றும் கூட்டணி கட்சியின் வேட்பாளர்கள் சசிகலாவை வரவேற்றனர்.