பினாமி பெயரில் இருந்த சசிகலாவின் சொத்துகள் - முடக்கிய வருமான வரித்துறை

பினாமி பெயரில் இருந்த சசிகலாவின் சொத்துகள் - முடக்கிய வருமான வரித்துறை
பினாமி பெயரில் இருந்த சசிகலாவின் சொத்துகள் - முடக்கிய வருமான வரித்துறை

பினாமி பெயரில் வாங்கியுள்ள சசிகலாவின் 15 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது. இதுவரை 4000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை வருமான வரித்துறை முடக்கி உள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும், அவரது தோழியான சசிகலாவுக்கும் சொந்தமான இடங்களில் கடந்த 2017ஆம் ஆண்டு வருமான வரித்துறை சோதனை நடத்தியிருந்தனர். அந்த சோதனையின் முடிவில், பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் வருமான வரித்துறை வழக்குபதிவு செய்திருந்தது. அதன்பேரில் சசிகலாவுக்கு சொந்தமான சொத்துகளை வருமான வரித்துறை முடக்கி வருகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு மட்டும் சசிகலாவுக்கு தொடர்புடைய 1600 கோடி மதிப்புடைய சொத்துக்களை வருமான வரிதுறை முடக்கியது.

இதையடுத்து 2020ஆம் ஆண்டு போயஸ்தோட்டம், தாம்பரம், சேலையூர் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள 300கோடி ரூபாய் சொத்துகள் முடக்கப்பட்டது. அதன் பிறகு சிறுதாவூர் பங்களா, கோட நாடு எஸ்டேட் உள்ளிட்ட இடங்களில் சசிகலாவுக்கு சொந்தமான 2000 கோடி சொத்துகளை வருமான வரித்துறை முடக்கியது. இதனையடுத்து கடந்தாண்டு (2021) சென்னையை அடுத்த பையனூரில் சசிகலாவுக்கு சொந்தமான 49 ஏக்கர் நிலம் மற்றும் பங்களா என 100 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கம் செய்து வருமான வரித்துறை நோட்டீஸ் ஓட்டி சென்றனர்.

இந்த நிலையில் சென்னை தி நகர் பத்ம நாபா தெருவில் உள்ள ஆஞ்சனேயா பிரிண்டர்ஸ் என்ற நிறுவனம், சசிகலா பினாமி பெயரில் வாங்கப்பட்டது என உச்சநீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டதையடுத்து வருமான வரித்துறையினர் 15கோடி மதிப்பிலான அந்த நிறுவனத்தையும் இன்று முடக்கி உள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com