”தேவர் குருபூஜையில் பங்கேற்க சசிகலாவுக்கு அனுமதி வேண்டும்”- ஆட்சியரிடம் அதிமுகவினர் மனு

”தேவர் குருபூஜையில் பங்கேற்க சசிகலாவுக்கு அனுமதி வேண்டும்”- ஆட்சியரிடம் அதிமுகவினர் மனு
”தேவர் குருபூஜையில் பங்கேற்க சசிகலாவுக்கு அனுமதி வேண்டும்”- ஆட்சியரிடம் அதிமுகவினர் மனு

வி.கே. சசிகலா, தேவர் குருபூஜைக்கு வந்து மரியாதை செலுத்த மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி வழங்கக்கோரி அதிமுகவினர் ராமநாதபுரத்தில் மனு கொடுத்துள்ளனர். 

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் அவரின் 114-வது ஜெயந்தி விழாவும், 59வது குருபூஜை விழாவும் வருகின்ற அக்.28ம் தேதி நடக்க உள்ளது. இதற்காக அதிமுக மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணியின் இணைச் செயலாளர் சரவணன் மற்றும் அதிமுக மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர், ஒன்றிய மாணவரணி செயலாளர் முத்துராமலிங்கம் ஆகியோர் இணைந்து வருகின்ற அக்டோபர் 29-ஆம் தேதி காலை 10:30 - 11 மணிக்குள் முத்தராமலிங்கனாரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்த திட்டமிட்டுள்ளனர்.

மரியாதை செலுத்துகையில், வி.கே.சசிகலாவும் பங்கேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார் என தெரிவித்துள்ளார்கள் அவர்கள். இதில் வி.கே.சசிகலாவுக்கான உரிய காவல்துறை பாதுகாப்பு மற்றும் வாகன அனுமதி வழங்கக்கோரி ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக்கிடமும், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சங்கர்லால் குமாவாத்திடம் அவர்கள் மனுவாக கொடுத்தனர்.

ஓ.பி.எஸ் - இ.பி.எஸ். அணியை சேர்ந்த அதிமுக கட்சியை சேர்ந்தவர்கள், சசிகலாவுக்கு அனுமதி கோரி மனு கொடுத்த சம்பவம், ராமநாதபுரம் மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com