சசிகலா காலாவதியான மருந்து; அவரை மக்கள் ஏற்கவில்லை - வைகைச்செல்வன்

சசிகலா காலாவதியான மருந்து; அவரை மக்கள் ஏற்கவில்லை - வைகைச்செல்வன்
சசிகலா காலாவதியான மருந்து; அவரை மக்கள் ஏற்கவில்லை - வைகைச்செல்வன்

சசிகலா ஒரு காலாவதியான மருந்து. சசிகலாவை பொதுச் செயலாளராக நாங்கள் ஏற்றுக்கொண்டாலும் மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என சிங்கம்புணரியில் அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வன் பேசினார்.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் எம்ஜிஆரின் 104வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அதிமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வன் பேசும்போது...

"சசிகலா கலாவதியான மருந்து. அவரை பொதுச் செயலாளராக்க பொதுக்குழுவில் தீர்மானத்தை வாசித்தது நான்தான். நாங்கள் அப்போது அவரை ஏற்றுக் கொண்டாலும் மக்கள் அவரை ஏற்றுக் கொள்ளவில்லையே. மக்கள் ஏற்றுக் கொள்ளாததால்தான் இபிஎஸ் ஓபிஎஸ் கட்சியை வழி நடத்தினார்கள்” என்று கூறியவர்,

“டிடிவி தினகரன் ஆர்.கே நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு கடன் பாக்கி வைத்துவிட்டு தலைமறைவானவர். ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் இருவரிடமும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com