ஜன.27-ல் சசிகலா விடுதலை; பிப்.5-ல் விடுவிக்கப்படுகிறார் இளவரசி!

ஜன.27-ல் சசிகலா விடுதலை; பிப்.5-ல் விடுவிக்கப்படுகிறார் இளவரசி!

ஜன.27-ல் சசிகலா விடுதலை; பிப்.5-ல் விடுவிக்கப்படுகிறார் இளவரசி!
Published on

ஜனவரி 27ம் தேதி சசிகலா விடுதலையாகவுள்ள நிலையில் பிப்ரவரி 5-ல் இளவரசியும் விடுவிக்கப்படுகிறார். சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வழங்கப்பட்ட நான்காண்டு கால சிறைத்தண்டனை வரும் பிப்ரவரி மாதத்துடன் நிறைவடைகிறது.

இந்நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கில் வரும் 27-ல் சிறையிலிருந்து சசிகலா வெளிவரும் நிலையில், பிப்ரவரி 5-ல் இளவரசி விடுதலையாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அபராதத் தொகையான 10 கோடி ரூபாய் செலுத்தாததால் சுதாகரன் விடுதலை தாமதமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com