பன்னீர்செல்வம் பின்னணியில் திமுக உள்ளது: சசிகலா குற்றச்சாட்டு

பன்னீர்செல்வம் பின்னணியில் திமுக உள்ளது: சசிகலா குற்றச்சாட்டு
Published on

பன்னீர்செல்வம் பின்னணியில் திமுக உள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா குற்றம்சாட்டியுள்ளார்.

’என்னை கட்டாயப்படுத்தியதால் தான் ராஜினாமா செய்தேன்’ என முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். இதையடுத்து அதிமுக பொருளாளர் பொறுப்பில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டு அப்பதவிக்கு திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டு உள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா அறிவித்தார்.

பின்னர் போயஸ் கார்டனில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சசிகலா, அதிமுகவினர் ஒரே குடும்பமாக இருக்கிறார்கள், எங்களுக்குள் எந்த குழப்பமும், பிரச்சனையும் இல்லை என கூறினார். மேலும், மிரட்டியதாக கூறியதில் உண்மையில்லை, தூண்டுதல் காரணமாக தான் பன்னீர்செல்வம் கூறுகிறார் என்றும் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com