சர்கார் பேனர் கிழிப்பு விவகாரம்... கொலையா..? தற்கொலையா..?

சர்கார் பேனர் கிழிப்பு விவகாரம்... கொலையா..? தற்கொலையா..?
சர்கார் பேனர் கிழிப்பு விவகாரம்... கொலையா..? தற்கொலையா..?

சர்கார் பட‌ பேனரை கிழித்ததாக எழுந்த புகாரில் தாக்கப்பட்ட வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த‌ நபர் தூக்கிட்ட நிலையில் சடலமாக‌ மீட்கப்‌பட்டார்.

தீபாவளி பண்டிகையையொட்டி விஜய் நடிப்பில் உருவான சர்கார் திரைப்படம் நேற்று வெளியானது. இதனையொட்டி பல தியேட்டர்கள் முன்பு விஜய் ரசிகர்கள் பேனர்களை வைத்து உற்சாகத்தை வெளிப்படுத்தினர். சிலர் டிக்கெட் கிடைத்ததால் மகிழ்ச்சியுடன் படத்தை பார்க்க சிலரோ டிக்கெட் கிடைக்காததால் படம் பார்க்க முடியாமல் தங்களது வருத்தத்தை வெளிப்படுத்தினர்.

வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே உள்ள ஈராளச்சேரி கிராமத்திலும் சர்கார் படத்திற்கு பேனர் வைக்கப்பட்டது. இந்த பேனரை யாரோ கிழித்ததாக கூறப்படுகிறது. இதில் தொடர்புடையதாக அதே கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் மீது 10 பேர் கொண்ட கும்பல் சரமாரி தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது.

இந்நிலையில் தாக்குதலுக்குள்ளான மணிகண்டன், உறவினர் வீட்டில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். முன்விரோதம் காரணமாக ஓச்சேரி பகுதியை சேர்ந்தவர்கள் மணிகண்டனை தாக்கியதாக காவேரிப்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மணிகண்டனின் மரணம் கொலையா? தற்கொலையா என காவல்து‌றையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com