அதிமுக-வா பாஜக-வா? தேர்தல் கூட்டணி யாருடன்? “ஒரு வாரத்தில் முடிவெடுக்கப்படும்” - சரத்குமார்

“அதிமுகவுடன் இரண்டு கட்ட பேச்சு வார்த்தை முடிந்துள்ளது. பாஜகவும் முக்கிய நபர்களை அனுப்பி பேசி உள்ளனர். இன்னும் ஒரு வாரத்தில் கூட்டணி குறித்த முடிவு எடுக்கப்படும்” என்று சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் தெரிவித்தார்.
Sarath kumar
Sarath kumarpt desk

செய்தியாளர்: மருதுபாண்டி

சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் திருநெல்வேலியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்... “சமத்துவ மக்கள் கட்சியை பொறுத்த வரையில் 2026 சட்டமன்றத் தேர்தல்தான் எங்கள் இலக்கு. ஆனால் தற்போது நாடாளுமன்றத் தேர்தல் வர உள்ளதால் அதையும் எதிர்கொள்ள வேண்டிய சூழல் எங்களுக்கு உள்ளது.

சரத்குமார்
சரத்குமார்

கல்வியையும் சுகாதாரத்தையும் தவிர மற்ற இலவசங்கள் தவிர்க்கப்பட வேண்டும். ஜனநாயகம் என்பது பணநாயகமாக மாறிவிட்டதால் பணத்தைக் கொடுத்து வாக்கை வாங்கி விடலாம் என்று நம்புகின்றனர். 24ஆம் தேதி சமத்துவ மக்கள் கட்சியின் உயர்மட்டக் குழு கூட்டம் நடைபெற்றது. ஆனால் அந்த கூட்டத்தில் ஒருமித்த முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை.

Sarath kumar
பாகிஸ்தான்: நீண்ட இழுபறிக்குப் பின் முடிவு.. மீண்டும் கூட்டணி ஆட்சி.. பிரதமராகிறார் ஷெபாஸ் ஷெரீப்!

தலைவர் என்ற முறையில் கூட்டணி குறித்து முடிவெடுக்க தனிப்பட்ட அதிகாரம் எனக்கு கொடுக்கப்பட்டாலும் நிர்வாகிகளின் கருத்தைக் கேட்டறிய வேண்டியது அவசியம். அதிமுகவுடன் இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.

பாஜகவின் முக்கிய தலைவர்களும் என்னை தொடர்பு கொண்டு கூட்டணி குறித்து பேசி உள்ளனர். ஒரு வாரத்தில் கூட்டணி குறித்த முடிவு எடுக்கப்படலாம்” என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com