வருமான வரித்துறை அலுவலகத்தில் சரத்குமார் - ராதிகா ஆஜர்

வருமான வரித்துறை அலுவலகத்தில் சரத்குமார் - ராதிகா ஆஜர்
வருமான வரித்துறை அலுவலகத்தில் சரத்குமார் - ராதிகா ஆஜர்

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்தில் சரத் குமாரும், ராதிகாவும் ஆஜராகினர்.

தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமாரின் வீடு உள்பட 50 இடங்களில் கடந்த 7-ஆம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதனிடையே வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சரத்குமாருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதன்படி நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்தில் ஆஜரான சரத்குமாரிடம் பல மணிநேரங்களாக நடைபெற்ற விசாரணையில் பல்வேறு கேள்விகள் கேட்டதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து நேற்று சரத்குமாரின் மனைவிக்கு சொந்தமான ராடான் நிறுவனத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்நிலையில், இன்று மாலை 3 மணிக்கு நேரில் ஆஜராகுமாறு ராதிகாவுக்கு சம்மன் அனுப்பினர். அதேபோல் மீண்டும் ஆஜராகும்படி சரத்குமாருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. இதனையடுத்து இருவரும் 3 மணிக்கு ஆஜராகி உள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com