வடகிழக்கு பருவமழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சந்தீப் சக்சேனா சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். காவிரி ஆற்றில் ஒகேனக்கலை அடுத்த ராசிமணல் பகுதியில் புதிய அணை கட்டப்படுமா என்ற புதிய தலைமுறை செய்தியாளரின் கேள்விக்கு ஆய்வு செய்யப்படும் என அவர் பதிலளித்தார்.