நீதிமன்ற உத்தரவை மீறி வைகை ஆற்றங்கரையில் தொடரும் மணல் கொள்ளை

நீதிமன்ற உத்தரவை மீறி வைகை ஆற்றங்கரையில் தொடரும் மணல் கொள்ளை

நீதிமன்ற உத்தரவை மீறி வைகை ஆற்றங்கரையில் தொடரும் மணல் கொள்ளை
Published on

திண்டுக்கல் மாவட்டத்தில் வைகை ஆற்றங்கரையில் இரவும் பகலும் மணல் திருட்டு நடந்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.

தேனி மாவட்டத்தில் உற்பத்தியாகும் வைகையாறு, திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள விருவீடு, மட்டப்பாறை, சித்தர்கள்நத்தம், அணைப்பட்டி போன்ற ஊராட்சிகளுக்கு உட்பட்ட சுமார் 40 கிராமங்கள் வழியாக மதுரை நோக்கிச் செல்கிறது. ‌‌

இந்நிலையில் நிலக்கோட்டை அருகே கோயில் ஒன்றின் பின்புறம், அரசுக்கு சொந்தமான 10 ஏக்கர் பரப்பில் இரவு பகலாக மணல் அள்ளப்பட்டு வருகிறது.

இப்பகுதிகளில், வைகை ஆற்றில் மணல் படுகையில் மணல் அள்ளக்கூடாது என்று தடை உத்தரவு பெறப்பட்டும் நாள்தோறும் 50க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகளில் மணல் அள்ளப்பட்டு வருகிறது. ஒரு லாரி மணல் 35 ஆயிரம் ரூபாய் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து நிலக்கோட்டை வட்டாட்சியர் யூஜினிடம் கேட்டபோது, தொடர்ந்து நடவடிக்கை எடுத்துவருவ‌தாகக் கூறினார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com