சேலம்: கணவன் மீது சந்தேகம்-பிரச்னை முற்றியதால் இரு குழந்தைகளுடன் மனைவி எடுத்த சோக முடிவு!

சேலம்: கணவன் மீது சந்தேகம்-பிரச்னை முற்றியதால் இரு குழந்தைகளுடன் மனைவி எடுத்த சோக முடிவு!
சேலம்: கணவன் மீது சந்தேகம்-பிரச்னை முற்றியதால் இரு குழந்தைகளுடன் மனைவி எடுத்த சோக முடிவு!

காடையாம்பட்டி அருகே இரண்டு குழந்தைகளை கிணற்றில் வீசி கொலை செய்து, தாயும் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த காடையாம்பட்டி அருகில் உள்ள கே.மோரூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பிரபாகரன் - மரகதம் தம்பதி. இவர்களுக்கு செல்வகணபதி, கோகுல கிருஷ்ணன் ஆகிய இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் வேறொரு பெண்ணுடன் பிரபாகரன் திருமணத்தை மீறிய உறவு வைத்திருப்பதாக சந்தேகமடைந்த மரகதம், இதுகுறித்து கணவர் பிரபாகரனிடம் கேட்டுள்ளார். இதனால், கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில், இன்று காலை மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மரகதம், தனது இரண்டு குழந்தைகளையும் அவரது தோட்டத்திற்கு அழைத்துச் சென்று அங்கிருந்த விவசாய கிணற்றில் இரண்டு குழந்தைகளையும் தள்ளிவிட்ட தனக்கு நன்றாக நீச்சல் தெரியும் என்பதால், கால்களை கயிறு மூலம் கட்டியதோடு கல்லையும் கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்த பிரபாகரன், வீட்டில் மனைவி மற்றும் குழந்தைகள் இல்லாததை அறிந்து அக்கம் பக்கத்தில் தேடி பார்த்துள்ளார். பிரபாகரனின் உறவினர்களும் சந்தேகமடைந்து பல இடங்களில் தேடியுள்ளனர். இதையடுத்து கிணற்றின் அருகே பார்த்த போது, மூன்று பேரும் கிணற்றில் விழுந்த அறிகுறி இருப்பது தெரியவந்தது.

இதையடுத்த காடையாம்பட்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து அங்கு சென்ற தீயணைப்பு வீரர்கள், 80 அடி ஆழமுள்ள கிணற்றில் இறங்கி மரகதம் மற்றும் இரண்டு குழந்தைகளையும் சடலமாக மீட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த தீவட்டிப்பட்டி போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று மூன்று உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மூன்றுபேர் தற்கொலை குறித்து கணவர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com