காதல் திருமண விவகாரம் : கொளத்தூர் மணி உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு

காதல் திருமண விவகாரம் : கொளத்தூர் மணி உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு
காதல் திருமண விவகாரம் : கொளத்தூர் மணி உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு

சேலத்தில் இளமதி என்ற பெண்ணிற்கு நடந்த திருமண விவகாரத்தில் காதல் திருமணம் செய்த செல்வன், கொளத்தூர் மணி உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சேலத்தில் காதல் திருமண விவகாரத்தில் கடத்தப்பட்டதாக புகாரளிக்கப்பட்ட இளம்பெண் இளமதி, சேலம் மேட்டூர் காவல்நிலையத்தில் இன்று ஆஜரானார். வழக்கறிஞர் சரவணன் என்பவருடன் அவர் ஆஜராகியுள்ளார். அவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இளமதியை கடத்தியதாக கொளத்தூர் மணி, திருமணம் செய்துகொண்ட காதல் திருமணம் செய்து கொண்ட செல்வன், திராவிடர் விடுதலைக் கழக நிர்வாகிகள் ஈஸ்வரன், சரவணன் உள்ளிட்ட 4 பேர் பவானி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே காதல் திருமண விவகாரத்தில் கடத்தப்பட்டதாக கூறப்படும், இளமதி பெற்றோருடன் செல்ல விருப்பம் தெரிவித்ததாக அவரது வழக்கறிஞர் தரப்பிலிருந்து தகவல் வெளியாகியது. இருப்பினும், இன்னும் சற்று நேரத்தில் செய்தியாளர்களிடம் பேசவுள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக, சேலம் மாவட்டத்தில் சாதிமறுப்பு காதல் திருமணம் செய்துகொண்டதால் இளம்பெண்ணான இளமதி, கடத்தப்பட்டதாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. அவரை திருமணம் செய்துகொண்ட செல்வன் என்பவர் தாக்கப்பட்டு இளமதி காரில் கொண்டு செல்லப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது. அதுதொடர்பான சிசிடிவி காட்சிகளும் கைப்பற்றப்பட்டன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com