ஆசிரியராக மாறிய கலெக்டர் ரோகிணி

ஆசிரியராக மாறிய கலெக்டர் ரோகிணி

ஆசிரியராக மாறிய கலெக்டர் ரோகிணி
Published on

சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி, பள்ளி வளாகத்தில் சுகாதாரப் பணிகள் குறித்த ஆய்வில் ஈடுபட்டபோது வகுப்பறையில் ஆசிரியர் இல்லாததால், மாணவர்களுக்கு அவரே பாடம் எடுத்தார்.

சேலம் மாவட்டம் தம்மம்பட்டி, மல்லியகரை உள்ளிட்ட பகுதிகளில் டெங்கு ஒழிப்பு பணிகள் மற்றும் அரசின் திட்டப் பணிகள் குறித்து ஆட்சித் தலைவர் ரோகிணி ஆய்வு மேற்கொண்டார். கருத்தராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆட்சியர் ஆய்வு நடத்தியபோது, ஜாக்டோ - ஜியோ போராட்டம் காரணமாக ஆசிரியர்கள் வகுப்பிற்கு வரவில்லை. இதனால் மாணவ மாணவிகளே வகுப்பெடுத்து படிப்பதைக் கண்ட ஆட்சியர் ரோகிணி, உடனடியாக தானே வகுப்பெடுக்கத் தொடங்கினார். சுமார் ஒரு மணி நேரம் வரை வகுப்பெடுத்த அவர், மாணவ மாணவியருக்கு பல்வேறு அறிவுரைகளையும் வழங்கினார். பின்னர் வகுப்பிற்கு வராத ஆசிரியர்களிடம் விளக்கம் பெறவும் கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com