சேலம் | ரயிலில் கல்வி சுற்றுலா வந்த கேரள பள்ளி மாணவனுக்கு நேர்ந்த பரிதாபம்
செய்தியாளர்: தங்கராஜூ
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த நைமு ரஷித் என்ற மாணவன் கேரளாவில் விடுதியில் தங்கி 11-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் படித்துவந்த பள்ளி சார்பில் 3 நாள் கல்வி சுற்றுலாவாக 11 மாணவர்களை 2 ஆசிரியர்கள், கேரளாவில் இருந்து ஹைதராபாத்திற்கு ரயிலில் அழைத்து சென்றுள்ளனர்.
அப்போது சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள தின்னப்பட்டி ரயில் நிலையம் அருகே மாணவன் நைமு ரஷீத் ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த சேலம் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர். கல்வி சுற்றுலா சென்ற மாணவன் ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.