8 கிலோ கஞ்சா பறிமுதல்
8 கிலோ கஞ்சா பறிமுதல்pt desk

சேலம் | பயணிகள் ரயிலில் கேட்பாரற்றுக் கிடந்த 8 கிலோ கஞ்சா பறிமுதல்

சேலத்தில் பயணிகள் விரைவு ரயிலில் கேட்பாரற்றுக் கிடந்த 8 கிலோ கஞ்சாவை ரயில்வே பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.
Published on

செய்தியாளர்: மோகன் ராஜ்

ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து கேரள மாநிலம் ஆலப்புழா சென்ற பயணிகள் விரைவு ரயில் சேலத்திற்கு வந்தது. அப்போது, ரயில்வே பாதுகாப்பு படையினர் சோதனை மேற்கொண்டனர். அதில், ரயிலில் கேட்பாரற்றுக் கிடந்த பேக் ஒன்றை சோதனை செய்தனார். அதில், கஞ்சா இருப்பது தெரியவந்தது.

Rail
Railpt desk
8 கிலோ கஞ்சா பறிமுதல்
கன்னியாகுமரி | வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ.4.7 லட்சம் மோசடி – ஒருவர் கைது

இதையடுத்து அந்த ரயில் பெட்டியில் இருந்த பயணிகளிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில், கஞ்சாவை கடத்தி வந்தது யார் என்பது தெரியவில்லை. இதைத் தொடர்ந்து 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த ரயில்வே பாதுகாப்பு படையினர் அதை ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com