சேலம் : நிச்சயக்கப்பட்ட திருமணத்துக்கு மகன் மறுப்பு: விரக்தியில் தந்தை, தாய் தற்கொலை

சேலம் : நிச்சயக்கப்பட்ட திருமணத்துக்கு மகன் மறுப்பு: விரக்தியில் தந்தை, தாய் தற்கொலை
சேலம் : நிச்சயக்கப்பட்ட திருமணத்துக்கு மகன் மறுப்பு: விரக்தியில் தந்தை, தாய் தற்கொலை

சேலம் மாவட்டம் சங்ககிரியை அடுத்த இளம்பிள்ளையில் நிச்சயக்கப்பட்ட திருமணத்திற்கு மகன் மறுத்ததால், விரக்தியடைந்த தந்தை, தாய் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே புளியம்பட்டி பகுதியை சேர்ந்த விசைத்தறி தொழிலாளர்கள் தங்கமணி (50), ரத்தனா (45) தம்பதியினருக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இதனிடையே இரண்டு மகள்களுக்கும் திருமணம் முடிந்த நிலையில் மகன் என்ஜினீயர் ராஜா அண்ணாமலைக்கு (27) கடந்த மாதம் அழகப்பம்பாளையம் புதூர் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அந்தப்பெண்ணுடன் ராஜா அண்ணாமலை செல்போனில் பேசிய போது வேறு ஒருவரை அந்தப் பெண் காதலித்து வருவது தெரியவந்தது. இதுகுறித்த காரணத்தை பெற்றோர்களிடம் கூறாமல் நிச்சயக்கப்பட்ட திருமணம் வேண்டாம் என தெரிவித்துள்ளார் ராஜா அண்ணாமலை.

இதனால் விரக்தி அடைந்த ராஜா அண்ணாமலையின் தந்தை தங்கமணி தாய் ரத்னா ஆகிய இருவரும் அவர்களது வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இத்தகவல் அறிந்த மகுடஞ்சாவடி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரேதங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர். நிச்சயிக்கப்பட்ட திருமணத்திற்கு மகன் மறுத்ததால் விரக்தியடைந்த பெற்றோர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இளம்பிள்ளை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com