புதுக்கோட்டை ஆட்டுச் சந்தையில் விற்பனை மந்தம்

புதுக்கோட்டை ஆட்டுச் சந்தையில் விற்பனை மந்தம்
புதுக்கோட்டை ஆட்டுச் சந்தையில் விற்பனை மந்தம்

புரட்டாசி இறுதி வாரமான இன்று, புதுக்கோட்டை ஆட்டுச் சந்தையில் ஆடுகளின் வரத்து அதிகளவில் இருந்தும், விற்பனை மந்தமாகவே நடைபெற்றது.

வழக்கத்தைவிட 1000 ரூபாய் முதல் 1500 ரூபாய் வரை குறைத்து விலை கூறியும், ஆடுகளை வாங்க வியாபாரிகள் முன்வராததால், விவசாயிகள் கொண்டு வந்த ஆடுகளை கவலையுடன் திருப்பி கொண்டுசென்றனர். அதேசமயம், அடுத்த வாரம் ஐப்பசி முதல் வாரம் என்பதாலும், தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதாலும், ஆடுகள் விற்பனை அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com