"மக்கள் பணியில் ஈடுபடுவேன்"- சகாயம் ஐ.ஏ.எஸ்

"மக்கள் பணியில் ஈடுபடுவேன்"- சகாயம் ஐ.ஏ.எஸ்

"மக்கள் பணியில் ஈடுபடுவேன்"- சகாயம் ஐ.ஏ.எஸ்
Published on

மக்கள் பணியில் ஈடுபட உள்ளதாக விருப்ப ஓய்வுபெற்ற சகாயம் ஐ.ஏ.எஸ் தெரிவித்திருக்கிறார்.

மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்தபோது கிரானைட் ஊழலை வெளியே கொண்டு வந்தவர் ஐ.ஏ.எஸ் சகாயம். இதையடுத்து தமிழ்நாடு அறிவியல் நகர துணைத்தலைவராக 7 வருடமாக பதவி வகித்து வந்தார்.

அரசு பதவியிலிருந்து ஓய்வு பெற 3 ஆண்டுகள் உள்ள நிலையில் 57 வயதிலேயே வி.ஆர்.எஸ் கேட்டு கடந்த அக்டோபர் மாதம் விண்ணப்பித்திருந்தார். வி.ஆர்.எஸ் கேட்டு 3 மாதங்கள் நிறைவடைந்ததையடுத்து அரசு பதவியிலிருந்து இன்று விடுவிக்கப்பட்டுள்ளார்.

விருப்ப ஓய்வு பெற்றுள்ள நிலையில் மக்கள் பணியில் ஈடுபட உள்ளதாக தற்போது தெரிவித்திருக்கிறார். மேலும் மக்கள் பணியில் ஈடுபடுவது தொடர்பாக ஓரிரு நாட்களில் அறிவிப்பேன் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com