சபரிமலை விவகாரம்: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

சபரிமலை விவகாரம்: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

சபரிமலை விவகாரம்: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
Published on

சபரிமலை விவகாரத்தில் சீராய்வு மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.

அனைத்து வயது பெண்களையும் சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கடந்த 28-ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. பெண்களை அனுமதிக்கும் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதில்லை என ஐயப்பன் கோயிலை நிர்வகித்து வரும் திருவிதாங்கூர் தேவசம் போர்ட் தலைவர் பத்மகுமார் தெரிவித்தார். இதனிடையே, கேரள முதல்வர் பினராயி விஜயனும், உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு சீராய்வு மனுத்தாக்கல் செய்யப்போவதில்லை என்று தெரிவித்தார். மேலும் சபரிமலை கோயிலுக்கு வரும் பெண்களுக்கு பாதுகாப்பும், வசதியும் செய்து கொடுக்கப்படும் எனவும் கூறினார்.

இந்த தீர்ப்பை அமல்படுத்தும் நடவடிக்கையில் கேரள அரசு தீவிரமாக இறங்கியது. இதற்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. தீர்ப்புக்கு எதிராகவும், சபரிமலை ஐயப்பன் கோயிலின் பாரம்பரிய வழிபாட்டு முறையை பாதுகாக்க கோரியும் கேரளாவில் பல்வேறு இடங்களில் ஐயப்ப பக்தர்கள் பேரணி நடத்தினார்கள். இதில் பெண்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதற்கிடையே தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கத் தலைவர் ஷியாலஜா விஜயன் உச்சநீதிமன்றத்தில் நேற்று சீராய்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அரசியல் சாசனத்திற்கு எதிராக தீர்ப்பு வழங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என இன்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை நிராகரித்த உச்சநீதிமன்றம் அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு தெரிவித்துவிட்டது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com