தமிழகத்தில் ஊர்வலம் நடத்த அனுமதி கோரி ஆர்.எஸ்.எஸ் மேல் முறையீடு

தமிழகத்தில் ஊர்வலம் நடத்த அனுமதி கோரி ஆர்.எஸ்.எஸ் மேல் முறையீடு
தமிழகத்தில் ஊர்வலம் நடத்த அனுமதி கோரி ஆர்.எஸ்.எஸ் மேல் முறையீடு

தமிழகத்தில் ஊர்வலம் நடத்த அனுமதி கோரி ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

காந்தி ஜெயந்தி அன்று தமிழகத்தின் 50 இடங்களில் ஊர்வலம் நடத்த அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் ஊர்வலம் நடத்த அனுமதி அளித்தது. சட்டம் ஒழுங்கு சூழலை காரணம் காட்டி ஊர்வலத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து ஆர்.எஸ்.எஸ். தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 6 இடங்களை தவிர்த்து மீதமுள்ள 44 இடங்களில் உள்ளரங்க நிகழ்வாக ஊர்வலம் நடத்த ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு அனுமதி அளித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கி செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி பிறப்பித்த உத்தரவை உறுதிசெய்ய வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட காலத்தில் மற்ற அரசியல் கட்சியினரின் போராட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதாகவும், கருத்து சுதந்திரம் உள்ளிட்ட அம்சங்களை கருத்தில் கொள்ளாமலும் தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்ததாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com