" கோயில்களில் மொட்டை போடும் பணியாளர்களுக்கு மாதம் ரூ.5,000" - அமைச்சர் சேகர்பாபு

" கோயில்களில் மொட்டை போடும் பணியாளர்களுக்கு மாதம் ரூ.5,000" - அமைச்சர் சேகர்பாபு

" கோயில்களில் மொட்டை போடும் பணியாளர்களுக்கு மாதம் ரூ.5,000" - அமைச்சர் சேகர்பாபு
Published on

திருக்கோயில்களில் மொட்டை போடும் பணியாளர்களுக்கு மாதம்தோறும் ஐந்தாயிரம் ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் பேசிய திமுக உறுப்பினர் நந்தகுமார், கோயில்களில் முடி காணிக்கை செலுத்த கட்டணம் இல்லை என அறிவித்திருப்பது மூலம் மொட்டை போடும் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதா எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு, திருக்கோயில்களில் மொட்டைக்கு இனி கட்டணம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளதால் அந்த பணியில் ஈடுபட்டுள்ள ஆயிரத்து 749 பணியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு அவர்களுக்கு மாதம் தோறும் ஐந்தாயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்தார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com