மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிக்கு ரூ.1,500 கோடி ஒதுக்கீடு

மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிக்கு ரூ.1,500 கோடி ஒதுக்கீடு
மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிக்கு ரூ.1,500 கோடி ஒதுக்கீடு

மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிக்கு ஜப்பானைச் சேர்ந்த ஜைக்கா நிறுவனம் முதல்கட்டமாக 1,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

மதுரை தோப்பூரில் 224 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது. இதுவரை 5 கோடி ரூபாய் மதிப்பில் சுற்றுச்சுவர் மட்டுமே கட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி அமைப்பதற்கான மொத்த திட்ட மதிப்பான 1,977கோடி ரூபாயில், தற்போது 1,500 கோடி ரூபாயை ஜப்பானின் ஜைக்கா நிறுவனம் ஒதுக்கியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.

மீதமுள்ள நிதியானது அக்டோபர் 26-ம் தேதிக்குள் ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதனால் விரைவில் எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் தொடங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com