இரவு நேர ஊரடங்கை பின்பற்றாதோரிடமிருந்து சுமார் ரூ.11 லட்சம் வரை அபராதம் வசூல்

இரவு நேர ஊரடங்கை பின்பற்றாதோரிடமிருந்து சுமார் ரூ.11 லட்சம் வரை அபராதம் வசூல்
இரவு நேர ஊரடங்கை பின்பற்றாதோரிடமிருந்து சுமார் ரூ.11 லட்சம் வரை அபராதம் வசூல்

நேற்று இரவு ஊரடங்கில் முகக்கவசம் அணியாதது தொடர்பாக 5,666 வழக்குகளை சென்னை காவல்துறை பதிவு செய்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு, தமிழக அரசு 6.01.2022 முதல் 31.01.2022 வரை வார நாட்களில் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரையில் இரவு நேர முழு ஊரடங்கும், ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு உட்பட பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதன்பேரில் சென்னை பெருநகர காவல் சரக எல்லைக்குட்பட்ட பகுதியில் மொத்தம் 312 வாகன தணிக்கை சாவடிகள் அமைக்கப்பட்டு சட்டம், ஒழுங்கு, போக்குவரத்து மற்றும் ஆயுதப்படையைச் சேர்ந்த 10,000 காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று (17.01.2022) இரவு 10 மணி முதல் இன்று (18.01.2022) காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கில் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகள் மீறியது தொடர்பாக 95 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. அத்தியாவசிய தேவையின்றி வெளியே சுற்றிய 175 இருசக்கர வாகனங்கள், 9 ஆட்டோக்கள் மற்றும் 1 இலகுரக வாகனம் என மொத்தம் 185 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், நேற்று (17.01.2022) கொரோனா தடுப்பின் முக்கிய வழிகாட்டுதல் நெறிமுறையான முகக்கவசம் அணியாதது தொடர்பாக 5,666 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.11,33,200 அபராதமும், தனிமனித இடைவெளி கடைபிடிக்காதது தொடர்பாக 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.11,000 அபராதமும் வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும், போக்குவரத்து காவல் குழுவினர் மேற்கொண்ட வாகனத் தணிக்கையில், மதுபோதையில் வாகனம் ஓட்டியது தொடர்பாக 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு சமயத்தில் தமிழக அரசு அறிவித்துள்ள வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி அத்தியாவசிய தேவையின்றி வெளியில் வருவதை தவிர்க்கும்படி சென்னை காவல் துறை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com