ரூ.1000 மற்றும் இலவச ரேஷன் பொருட்கள் இன்று முதல் விநியோகம்

ரூ.1000 மற்றும் இலவச ரேஷன் பொருட்கள் இன்று முதல் விநியோகம்
ரூ.1000 மற்றும் இலவச ரேஷன் பொருட்கள் இன்று முதல் விநியோகம்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு தமிழக அரசு சார்பில் தலா ரூ.1000 இன்று முதல் வழங்கப்பட உள்ளது.

கொரோனா தடுப்புக்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் வாழ்வாதாரம் பாதிப்பதை கருத்தில் கொண்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு  ரூ.1000 ஆயிரம் ரொக்கத்துடன் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களின் தொகுப்பு வழங்கப்படும் என முதலமைச்சர் சட்டப்பேரவையில் கடந்த வாரம் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் இவற்றின் விநியோகம் இன்று முதல் தொடங்க உள்ளது. இதற்கிடையில் இப்பொருட்களை வாங்குவதற்கான டோக்கனை பெற ரேஷன்
கடைகளில் மக்கள் குவிந்ததால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டது. இதையடுத்து டோக்கன் அவரவர் வீடுகளுக்கே சென்று வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com