ரயில்களில் பட்டாசு: 3 வருட சிறை, ரூ.3 ஆயிரம் அபராதம்

ரயில்களில் பட்டாசு: 3 வருட சிறை, ரூ.3 ஆயிரம் அபராதம்

ரயில்களில் பட்டாசு: 3 வருட சிறை, ரூ.3 ஆயிரம் அபராதம்
Published on

ரயிலில் பட்டாசு கொண்டுசென்றால் 3 ஆண்டு சிறை தண்டனையும் மூவாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

தீபாவளி பண்டிகை வரும் 18-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி புதுதுணிமணிகள் மற்றும் பட்டாசுகள் வாங்க மக்கள் அலைமோதி வருகின்றனர். சென்னை போன்ற பெருநகரங்களில் தீபாவளி விற்பனை சூடுபிடித்துள்ளது. 

தீபாவளியை ஒட்டி சிவகாசிக்கு பட்டாசு வாங்க வருவோரின் ‌எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்தப் பட்டாசுகளை ரயிலில் கொண்டு செல்லக் கூடாது என்று ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது. அப்படிக் கொண்டு சென்றால் 3 ஆண்டு சிறை தண்டனையும் மூவாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் சிவகாசி, திருத்தங்கல், விருதுநகர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் ரயில்வே பாதுகாப்பு படையினர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com