சூரைக்காற்றுடன் சீற்றமான கடல்: மீன்பிடிக்கச் செல்லாத மீனவர்கள் - அணிவகுத்து நிற்கும் படகு

சூரைக்காற்றுடன் சீற்றமான கடல்: மீன்பிடிக்கச் செல்லாத மீனவர்கள் - அணிவகுத்து நிற்கும் படகு

சூரைக்காற்றுடன் சீற்றமான கடல்: மீன்பிடிக்கச் செல்லாத மீனவர்கள் - அணிவகுத்து நிற்கும் படகு
Published on

கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு கடல் பகுதிகளில் சூரைக்காற்றுடன் கடல் சீற்றமாக காணப்படுவதால் குளச்சல், முட்டம் மீன்பிடி துறைமுகங்களை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், முட்டம் மீன்பிடி துறைமுகங்களை தங்குதளமாகக் கொண்டு ராஜாக்கமங்கலம் முதல் நீரோடி வரையிலான சுமார் 40-க்கும் மேற்பட்ட மீனவ கிராம மக்கள் பைபர் படகு மற்றும் விசைப ;படகுகளில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகம் மற்றும் ஆந்திரா பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் குமரிக்கடல், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூரைக்காற்றுடன் கடல் சீற்றமாக காணப்படும் எனவும் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது.

இதையடுத்து கன்னியாகுமரி மாவட்டம் அரபிக்கடல் பகுதியில் ஞாயிற்று கிழமை மாலை முதலே சூரைக்காற்றுடன் கடல் சீற்றமாகவே காணப்படுவதோடு கடல் பகுதிகளில் கனமழையும் பெய்தது. இதனால் நேற்று மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லாத நிலையில், குளச்சல், முட்டம் மீன்பிடி துறைமுகங்களைச் சேர்ந்த சுமார் 10-ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகு மீனவர்களும் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்களும் 2-நாளாக இன்றும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.

இதனால் தங்கள் படகுகளை பாதுகாப்பாக துறைமுகங்களிலேயே மீனவர்கள் நிறுத்தி வைத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com