“28 ஆண்டுகளில் முதல்முறையாக பரோல் கேட்கிறேன்” - ராபர்ட் பயாஸ் தரப்பு கோரிக்கை 

 “28 ஆண்டுகளில் முதல்முறையாக பரோல் கேட்கிறேன்” - ராபர்ட் பயாஸ் தரப்பு கோரிக்கை 
 “28 ஆண்டுகளில் முதல்முறையாக பரோல் கேட்கிறேன்” - ராபர்ட் பயாஸ் தரப்பு கோரிக்கை 

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ராபர்ட் பயாஸ், பரோல் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் நவம்பர் 4-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கியுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரில் ஒருவரான ராபர்ட் பயாஸ், தன் மகன்  தமிழ்கோ-வின் திருமண ஏற்பாடுகளை செய்ய 30 நாட்கள் பரோல் வழங்கக்கோரி ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்திருந்தார். சிறைத்துறை டிஐஜி-க்கு அளித்த மனு மீது 40 நாட்களாக எந்த நடவடிக்கையும் எடுக்காததால், பரோல் கோரி தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ், டீக்காராமன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சிறைத்துறையின் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய இருப்பதால் வழக்கை நவம்பர் முதல் வாரத்திற்கு ஒத்திவைக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார். ஆனால் ராபர்ட் பயாஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 28 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் ராபர்ட் பயாஸ் முதல்முறையாக பரோல் கேட்பதாகவும், மகனின் திருமண ஏற்பாடுகளை செய்ய வேண்டுமென்பதால் அதை பரிசீலித்து உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்தார். பின்னர் அரசு பதில் மனுத்தாக்கல் செய்ய அவகாசம் வழங்கிய நீதிபதிகள், வழக்கை நவம்பர் 4-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com