ஐஏஎஸ் அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் கொள்ளை

ஐஏஎஸ் அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் கொள்ளை

ஐஏஎஸ் அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் கொள்ளை
Published on

சென்னையில் ஐஏஎஸ் அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் நகை மற்றும் 5 ஆயிரம் பணம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கொரட்டூர் அடுத்த கோல்டன் காலனியில் வசித்து வருபவர் லீலா நாயர். ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியான இவர் தற்போது சென்னை மத்திய தீர்பாயத்தில் உறுப்பினராக உள்ளார். தனிமையில் வசித்து வரும் லீலா நாயர், நேற்று இரவு வழக்கம்போல் வீட்டின் கீழே பூட்டிவிட்டு முதல் மாடியில் உள்ள படுக்கை அறையில் தூங்கியுள்ளார்.

பின்னர் காலை எழுந்து வந்து கீழே பார்த்தபோது வீட்டின் கதவு திறக்கப்பட்டு உள்ளே இருந்த பீரோ உடைக்கப்பட்டிருந்தது. மேலும் பீரோவில் வைத்திருந்த 20 சவரன் தங்க நகை மற்றும் 5 ஆயிரம் ரொக்கம் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது.  இதுகுறித்து லீலா நாயர் உடனடியாக கொரட்டூர் காவல் நிலையத்து தகவல் அளித்தார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் லீலா நாயர் வீட்டின் அருகே உள்ள கண்காணிப்பு கேமிரா உதவியுடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஐஏஎஸ் அதிகாரி என்று தெரிந்தும் மர்ம நபர்கள் அவர் தனியாக இருப்பதை அறிந்து இந்தக் கொள்ளை சம்பவத்தை நிகழ்த்தி இருகின்றனர். ஐஏஎஸ் அதிகாரி வீட்டில் நடைபெற்ற இந்தக் கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com