செங்கல்பட்டு: டிராக்டர் சக்கரத்தில் சிக்கி தாயின் கண் முன்னே இரு குழந்தைகள் உயிரிழப்பு

செங்கல்பட்டு: டிராக்டர் சக்கரத்தில் சிக்கி தாயின் கண் முன்னே இரு குழந்தைகள் உயிரிழப்பு

செங்கல்பட்டு: டிராக்டர் சக்கரத்தில் சிக்கி தாயின் கண் முன்னே இரு குழந்தைகள் உயிரிழப்பு
Published on

மறைமலைநகர் அருகே டிராக்டரில் சிக்கி இரண்டு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், தாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் கருநீலம் கிராமத்தைச் சேர்ந்த தேன்மொழி மற்றும் அவரது குழந்தைகளான சித்தார்த் (4) லோகேஷ் (3) ஆகிய மூவரும் இருசக்கர வாகனத்தில் சிங்கபெருமாள் கோயில் பகுதியில் இருந்து கருநீலத்திற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது முன்னால் சென்ற டிராக்டரை முந்திச் செல்ல முயன்றபோது எதிர் திசையில் வந்த ஸ்கூட்டர் மீது தேன்மொழி சென்ற வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், தேன்மொழி, அவரது இரண்டு குழந்தைகளுடன் கீழே விழுந்துள்ளார். இதையடுத்து பின் தொடர்ந்து வந்த டைரக்டரின் சக்கரத்தில் சிக்கி குழந்தை சித்தார்த்தின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சித்தார்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததார். காயம்பட்ட லோகேஷ் மற்றும் தேன்மொழியையும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.

லோகேஷ் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்ததால் செங்கல்பட்டு மருத்துவமனையில் இருந்து சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே உயிரிழந்துள்ளர். இரண்டு குழந்தைகளும் உயிரிழந்த நிலையில், தற்போது தேன்மொழி செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். ஒரே நேரத்தில் இரண்டு குழந்தைகள் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com