ஆர்.கே.நகர் வாக்குகள் 19 சுற்றுகளில் எண்ணப்படும்: மாவட்ட தேர்தல் அதிகாரி

ஆர்.கே.நகர் வாக்குகள் 19 சுற்றுகளில் எண்ணப்படும்: மாவட்ட தேர்தல் அதிகாரி
ஆர்.கே.நகர் வாக்குகள் 19 சுற்றுகளில் எண்ணப்படும்: மாவட்ட தேர்தல் அதிகாரி

ஆர்.கே.நகர் இடைதேர்தலில் பதிவான வாக்குகள் 19 சுற்றுகளில் எண்ணப்படும் என மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் தெரிவித்தார்.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் வாக்குப்பதிவுகள் நேற்று நடைபெற்று முடிந்தன. தேர்தல் முடிவுகள் வரும் ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆர்.கே.நகரில் வாக்குகள் பதிவு செய்யப்பட்ட, மின்னணு வாக்கு இயந்திரங்கள் சென்னை ராணி மேரி கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. அவற்றை மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் மற்றும் காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் ஆகியோர் இன்று ஆய்வு செய்தனர்.

பின்னர் பேசிய கார்த்திகேயன், தேர்தல் ஆணைய இணையதளத்தில் வாக்கு‌ எண்ணிக்கை நேரடியாக ஒளிபரப்பப்படும் என்றார். அவரைத் தொடர்ந்து பேசிய காவல்துறை ஆணையர் விஸ்வநாதன், வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும், 500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறினார். ‌மேலும், ‌வாக்கு எண்ணிக்கை தினத்தன்று செய்யப்பட வேண்டிய ஏற்பாடுக‌ள் அனைத்தும் முடிந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com